புதன், 11 பிப்ரவரி, 2009

கலைஞரை கவுத்திய கவிஞர் வாலி

சுறுசுறுப்பாய் பணியாற்றி அதாங்க பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு நாட்டுக்காக பெரும் தொண்டாற்றிய சமத்துவ பெரியார்(?) கலைஞர் முதுகுவலி காரணமாக ஆஸ்பத்ரியே கதி என கிடக்கிறார். எவன் பாராட்டுவிழா எடுத்தாலும் பாரபட்சமின்றி கலந்துகொள்ளும் கலைஞர் தற்போதுள்ள (பாராட்டுவிழா) அப்பாயின்மெண்டுகளை ரத்து செய்ய வேண்டாம் நான் விரைவில் குணமடைந்து வந்து உங்கள் வசைமாறி , சாரி வாழ்த்துமாறிகளை வாங்கிக்கொள்கிறேன் என்றும் கூறியனுப்பி இருக்கிறார். அடப்பாவிகளா எப்ப வாலி கலைஞரை "ஒபாமா உணக்கு ஒப்பாகுமா என்று கேட்டபோது" அதைக்கேட்டு மகிழ்ந்து படுத்தகலைஞர் இன்னிக்கு ஆப்பரேசன் வரைக்கும் போய், ஒருவேளை அந்த விழாதான் கலைஞரின் கடைசிவிழாவாக இருக்குமோ என நினைக்கும்படி ஆகிவிட்டது. வாலி நீ வாழி. இனியாவது கலைவாணர் அரங்கம் காத்துவாங்கட்டும்.

கருத்துகள் இல்லை: