சனி, 2 மே, 2009

என்னை நல்லாத் திட்டுங்க-கலைஞர்

ஒரு படத்துல வடிவேலு தண்ணியடிக்கப் போவாரு. அப்ப அந்த நாத்தம் தாங்கமுடியாம பக்கத்துல உள்ள ஒருத்தர்ட அண்ணன் என்னய நல்லாத் திட்டுங்கண்ணே என்பார். அதே போல திருச்சிக்கி பிரச்சாரத்திற்குப் போன கலைஞரும் என்னய எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டுங்க என்று சொல்லியிருக்கிறார். 

திருச்சியிலே பிரச்சாரம் மேற்கொண்ட கலைஞர் பேசுகையில்

இன்று நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. பிப்ரவரி 11ம்நாள் இங்கு வரக்கூடிய அளவுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என்று மருத்துவர்கள் கூறினர். அன்று மருத்துவர்கள் கூடி கலந்தாலோசித்து இரண்டு வழிகள்தான் உள்ளது என்று என்னிடம் கூறினர். முதுகில் ஏற்பட்ட வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு 85 வயதாகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தால் வெற்றி அல்லது ஆயுள் முடிவுதான் ஏற்படும். இதில் எதை தேர்வு செய்யப்போகிறீர்கள் என்று கேட்டனர். குடும்பத்தினர் அழுது புலம்பினர்.(தலைவர் இப்படி ஏதாவது சொல்லியே உடன்பிறப்புகளைக் கவுத்திவிடுவார்)

அறுவை சிகிச்சையால் வரும் முடிவுக்கு தயார் என்று கூறினேன். அவை முடிந்து இரண்டு மாத காலம் ஆகியும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறேன். இன்றும் 3மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன்.  அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன். (வழக்கமாக மருத்துவர் கோபால் மட்டும் தான் வருவார். இப்ப எலக்சன் நேரமில்லையா! அதான் சங்கர் சலீம் சைமன் ஸ்டைலில இப்படி ஒரு கூட்டணிய புடிச்சிருக்காரு தலைவர்)

இந்த சிகிச்சையை நாட்டின் முன்னேற்றத்துக்கு அளிக்கவும் இதுபோன்ற மதநல்லிணக்கம் வர வேண்டும் என்பது என் ஆசை. (ஆனா தலைவரே முன்ன ஒரு தடவை பாஜகவோடு கூட்டு வைத்த போது இத மாதிரி நீங்க சொல்லலையே!)

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அண்ணா என்னை நிற்க சொன்னார். அப்போது முதன் முதலாக விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டேன்.1953ல் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாதம் சிறை சென்றேன். அப்போது என்னுடன் முல்லை சக்தி, கஸ்தூரி ராஜா, குமாரவேலு, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். 

அப்போது ஏற்பட்ட வியாதிதான் இதுவரை நீ டிக்கிறது. என்னை தமிழ் தொண்டனாக ஆக்கியது இந்த திருச்சிதான். ( நீங்க என்னத்த பண்ணினாலும் இன்னமும் அது டால்மியா புரம் என்று தானே நீடிக்கிறது. நீங்கள் முதல்வராக இருந்துமே அதைக் கண்மும் கானாது விட்டுவிட்டீர்களே தலைவரே!)

இருவர் தீக்குளித்து மாண்டனர். சரித்திரம் படைத்தவர்கள் இந்த திருச்சியை சேர்ந்தவர்கள். அன்பில் தர்மலிங்கம்,  எம்.எஸ்.மணி,  அழகுமுத்து காமாட்சி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது காமாட்சியை ஒரு பெண் என தவறாக நினைத்து பத்திரிகையில் செய்தி வெளியிட்டனர். அவர் பெயர் காமாட்சி நாதன் என்பது அதன் பிறகு தான் தெரிந்தது. திருச்சியில் கிடைத்த இணை பிரியாத நண்பர்கள் இப்போது இல்லை. அவர்கள் இல்லாமல் நான் மட்டுமே இருக்கிறேன். தமிழுக்கு ஆபத்து வந்தால் அந்தத் தமிழை காப்பாற்றுவதற்காக இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கருதுகிறேன். (அடடடா.. தலைவருக்கு எலக்சன் நேரத்துல என்னவெல்லாமோ ஞாபகம் வரும். ராஜபக்சேவுடன் போனில் பேசியதாக அம்மா கூறியதற்கு நீங்கள் இன்னும் பதில் கூறவில்லையே தலைவரே!)

அறுவைச் சிகிச்சை முடிந்து 2 மாதமாகி விட்டது. டாக்டர்கள் சுற்றுப்பயணம் செய்யக் கூடாது என்றார்கள். ஏன் என்றேன். மீண்டும் கோளாறு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றார்கள். இருப்பது ஒரு உயிர், போகப்போவது ஒரு முறை. அது நல்லதுக்காக நல்லவர்களை காப்பாற்றுவதற்காக போகட்டும் என்று அண்ணா கூறினார். அவர் கூறியபடி என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். குளித்தலையில் இருந்த காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன். (கேவலம் ஓட்டுக்காக எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு!)

இப்போது 85 வயதிலும் சொல்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், உங்கள் சொந்தக்காரன், இந்த மேதினக் கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. வாழும் காலத்தில் என்ன பணியாற்றினோம் என்பதுதான் முக்கியம். தமிழ் இனத்தை வளர்த்தவர்களை மறக்க மாட்டேன். (ஆனால் இப்போது தமிழினம் அழிகிறதே தலைவரே)

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருக்குவளை என்ற ஊரில் பிறந்தவன். எனது தந்தை என்னை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். நான் உங்களுக்கு வேலைக்காரனாகவும், பணியாளனாகவும், தொண்டனாகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். (இது எலக்சன் நேரத்தில் மட்டுமே கேட்டுக்கேட்டு புளித்துப் போன டயலாக்)

13 வயதில் எழுத ஆரம்பித்தேன். பரிணாம வளர்ச்சியில் திராவிட நாடு திராவிடர்க்கே என்று எழுதினேன். அண்ணா இதைக் கவனித்து, உனது இளமைக் காலத்தை வீணாக்கிக் கொள்ளாதே, ஒழுங்காகப் படி என்று சொன்னார். அவர் படியென்று சொன்னதையும் ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழுக்காக உழைத்தேன். பாளை சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது, அண்ணா,தன்னை வென்றார் தரணியை வெல்வார் என்று என்னைப் பற்றி எழுதினார். (அண்ணா இன்று இருந்திருந்தால் அந்த எழுத்துக்களை வாபஸ் வாங்கியிருப்பார் தலைவரே)

நான் இன்று உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் காட்சியைக் காண அண்ணா இங்கு இல்லை. அவர் இருந்திருந்தால் அறப்போர் வழியை மேலும் எனக்கு வகுத்துத் தந்திருப்பார். அண்ணா வழியில் அயராது உழைப்பேன். இந்தி திணிப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கத்தை திருச்சியில் நான் முழங்கினேன். அந்த முழக்கத்தின் அடிப்படையில் இந்த இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். உரிமைக்குரல் கொடுக்க வேண்டும்.(ஆனா உங்களுக்கே தெரியாமல் உங்க குடும்ப உறுப்பின‌ர்கள் மிகச்சரளமாக இந்தி பேசுகிறார்களே! அது சரி இது போன்றவை தொண்டர்களுக்காக மட்டும் தானே! அவர்கள் இந்தி படித்து டெல்லியிலே எம்பி ஆகிவிட்டார்கள். நாங்கள் இந்தியை வெறுத்து ரயிலில் கூட பயணம் செய்ய முடியவில்லை தலைவரே!)

என்னைப் பற்றியும், என்குடும்பத்தைப் பற்றியும் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் பழித்து பேசுகிறார்கள். மரத்தின் அடியில் மாட்டு சாணத்தை கொட்டினால் அது எருவாக மாறி மரம் நன்றாக வளரும். அதேபோல் என் மீது போடப்படும் பழிகள்,எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது. என்னை நன்றாக திட்டுங்கள். அதை நான் எருவாக மாற்றிக் கொள்கிறேன். (ஆகா! தலைவர் கண்டுகினாருபா, அப்ப இன்னும் ஸ்பீட கூட்டலாம்னு சொல்றீயலா)

டாக்டர் ராமதாஸ் என்னை நாடகம் ஆடி என்று கூறுகிறார். ஆமாம், நானும் அண்ணாவும் உதயசூரியன், காகிதப்பூ போன்ற நாடகங்களை ஆடினோம். அப்படி நாடகம் ஆடிதான் கட்சியை வளர்த்தோம். அவர் பணத்திற்காகவும்,பதவிக்காகவும் நாடகம் ஆடிவருகின்றனர். (அவரும் ஒரு சினிமாவுல நடிச்சிருக்காருல்ல‌)

திருமாவளவன் எனது சொந்தக்காரர். அவருக்கும் கொள்கை உடன்பாடு உள்ளது. என் வீட்டுப் பெண் அவர் வீட்டிலும், அவர் வீட்டுப் பெண் என் வீட்டிலும் உள்ளது போல் சம்மந்தி உறவு. (இதையே நீங்கள் திருமா முன்னர் அம்மாவுடன் கூட்டணியில் இருந்த போது சொல்லவில்லையே ஏன் தலைவரே?)

இங்கு உள்ள நாம் அனைவரும் மதத்தாலும், மொழியாலும் ஒன்றாக உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சின்னம் உதயசூரியன், காங்கிரஸ் சின்னம் கை, விடுதலை சிறுத்தைகள் சின்னம் நட்சத்திரம். வானத்தில் சூரியன் இருக்கும், நட்சத்திரமும் இருக்கும்.  (ஆனா ஒரே நேரத்துல இரண்டும் இருக்காதே தலைவரே! அப்டின்னா இதுக்கு என்னா அர்த்தம்?)

இதனை கை சுட்டிக்காட்டுவதுபோல நமது சின்னங்கள் பொருத்தமாக இருக்கிறது. இந்த மூன்று சின்னங்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார் கருணாநிதி. (ஆக மொத்தம் இந்தவாட்டி இருக்குற‌ கையெல்லாம் இலை,பழம்,அரிவாள்,சுத்தி,கதிர்,பம்பரம் ஆகிய பொருட்களைத் தான் எடுக்கப் போறது உறுதி தலைவரே!)

 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

@@#@$$)(*()$)(#$&#*&$
(நோ...நோ... ஒன்லி பூஸ்ட்)
@#$%#$#@#@#$$~
(ஏய்... மம்மி பாவம்...)
#$$#%#$##$#
(ஏய்.... டாடி பாவம்...)
#@#@(#(*$#(*#($*(#
(டோட்டல் பேமிலி டேமேஜ்).


இந்த காமெடிதான் ஞாபகத்துக்கு வருது.

ttpian சொன்னது…

இந்திய பண்டாரங்கல்,செஇத தவரினால்,இனிமேல், தமிழன் வேறு...இந்தியன் வேறு...
ஒட்டமாட்டோம்!