திங்கள், 30 மார்ச், 2009

காருவெட்டி குரு திருவண்ணாமலையில் போட்டி

எத்தனை முறை சிறை சென்றிருப்பார் என அவருக்கே கணக்குத்தெரியாது.எத்தனை வழக்குகள் அவர் மீது உள்ளன என்று காவல் நிலயத்தில் கேட்டால் அவருக்கென தனி ஃபைலே இருக்கிறது என்கிறார்கள். வாயைத்திறந்தால் சென்னை பேசின் பிரிட்ஜை கிராஸான எபெக்ட் கிடைக்கும். அந்த அளவிற்கு அசிங்கம். "இங்க உள்ள போலீஸ்காரன் எவனும் இனிமே நைட்டுல அவனவன் பொண்டாட்டியோட  படுக்கமுடியாது என்றும்,ஆண்டிமடம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்றும், சிவசங்கர‌ன் (ஆண்டிமடம் MLA) பொண்டாட்டி வெள்ளைப் புடவக் கட்டப்போறா என்றும் பேசக்கூடாத தகதா சொற்களை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அது மட்டுமின்றி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரை மிகமிக மோசமான வார்த்தைகளாலும், ஆற்காடு வீராசாமியை மிக மட்டமான வார்த்தைகளாலும் (வீராசமியை எவ்வளவு திட்டினாலும் அவர் கோபப்பட மாட்டார்.அவருக்கு பழகிப் போய் விட்டது) வதைத்த பெருமைக்காக காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது தமிழக அரசு

இதற்கு முன்பிருந்தே மருத்துவர் அய்யா டிராமா'தாஸ் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த நேரம். அதே சூட்டில் குருவும் திமுகவைக் குடைய ஆரம்பிக்க குருவை பிடித்துக் கொண்டு போய் உள்ளே போட்டுக் குமுறியது காவல்துறை .இதைக் கண்டு பொருக்கமுடியாத தமிழர்களின் தன்மாணத்தலைவர் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் அய்யா நைசாக கலைஞரிடம் தூது விட ஆரம்பித்தார்.

இப்ப இன்னா மேட்டருன்னா வரப்போற எலக்சனுல திருவண்ணாமலையில் காடுவெட்டி குரு வேட்பாளராக நிற்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பிணராக வருவதற்கு இந்த குருவிற்கு முழுத்தகுதியும் உள்ளது என அய்யா தெரிவித்துள்ளார். காடுவெட்டி என்பது ஊரின் பெயராக இருந்தாலும் முன்பு காடுகளை வெட்டி வெட்டி பஸ்களை மறித்துப் போட்டு பொது மக்களுக்கு பெருந்தொண்டாற்றிய இந்த குருவிற்கு உங்கள் மண்ணான வாக்குகளை வாரித்தெளித்து நாடாளமன்றத்தியையும் நாறவையுங்கள் என மருத்துவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  

அடுத்துவருவது: ஞாயிறு அதிரடி: "உதயசூரியன் சின்னத்திலே"கலைஞர் காமெடி கடிதம்

2 கருத்துகள்:

ரமேஷ் வைத்யா சொன்னது…

யப்பா, கவாலி!
யாருப்பா நிய்யீ? பொயலு மாரி கெளம்பிகிறியே... வலுத்த பின்புலம் இல்லாம இது சாத்தியப்படாதே ராசா... நல்லா இரு!

பெயரில்லா சொன்னது…

சாதரண ஆளு எழுதுனா இந்நேரம் உசுரு எங்க இருக்கும் ?. தல பெரிய ஆளா இருப்பாரு நினைகிறேன்....இல்லாட்டி இவரும் ஒரு பெரிய ராவடியா இருப்பரோ ?. இவரும் ஒரு பெரிய அரசியல்வதியா இருப்பரோ ?.