செவ்வாய், 17 மார்ச், 2009

கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்

ஏறிய ஏணியை எட்டி உதைப்பது தமிழ் நாட்டுக்கு ஒன்னும்  புதுசு கெடயாது. தமிழக சினிமா ரசிகர்களுக்கு சில நேரங்களில் சொரணையற்றுப் போய்விடும்.அப்போது நாய் கடித்தாலும் நாலு நாளைக்குத் தெரியாது. அந்த வகையில் தமிழக சினிமா ரசிகர்கள் குறிப்பாக ஏழை ரசிக கண்மணிகள் தங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தவற்றை கொட்டி கொட்டி போஸ்டர் அடித்து பேனர் கட்டி இன்று மிகபிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய்.சென்னை மாநகராட்சியில் கூவ ந‌திக்கரையோரம் குந்திகினு இருப்பவர்ககளும்வானமே கூரையாய் பிளாட்பாம்களில் படுத்துக் கிடப்பவர்களும் எம்ஜிஆரை அடுத்து  விஜயையே கொண்டாடுகின்றனர் என்பது அந்த ஏரியா வாழ் மக்களுக்கு நன்கு தெரியும். இதனால் தான் என்னவோ பணமுதலைகளும், கையில்லாத டீசர்ட்,கழுத்தில்லாத டீசர்ட்,  சில நேரங்களில் துணியே இல்லாத‌  டீசர்ட் அணிந்த‌ நவரச மங்கைகளும், IT பெருமக்களும் பெருமளவு கூடி க் கும்மியடிக்கும் சத்யம் திரையரங்கில் விஜய் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டார்களாம். இது நான் சொல்லவில்லை. அந்தரங்கத்தில் (அந்த+அரங்கத்தில்) வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் சொன்னது.

இப்ப என்னா மேட்டருனா ஒரு காலத்திலே தன் அருமை தந்தை தமிழக பிட்டு பட உலகின் குரு திரு.சந்திரசேகர் எடுத்துவந்த (பிட்டு)  படங்களில் நடித்து ரசிகர்களினால் கவரப்பட்டு (ஏன் கவறாது? சகீலா படங்களின் வருகைகைக்கு முன் இவர் படம் தான் ரேட்டிங்கில் இருந்தது) முன்னனி ஹீரோவாய் உயர்ந்த விஜயின் சமீபத்திய‌ மிக பிரம்மாண்டமான வெற்றிப் படமான வில்லுவின் ரேட்டிங் குறித்து அறிவதற்காக அதன் இயக்குனர் பிரபுதேவாவை கையிலே பிடித்தபடி ஊர் ஊராய் சுற்றி வந்த விஜய்க்கு வில்லங்க பகவான் திருச்சியிலே தரிசணம் கொடுத்துவிட்டார்.

உங்களுக்குத் தான் எம்ஜிஆர்,ரஜினி ஸ்டைல் ஒத்துவரலியே அப்றம் ஏன் இந்த   ள‌விற்கு ரிஸ்க் எடுக்கிறீங்க என ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிறுபர் NDTV,BBC லெவலுக்கு கேள்வி கேட், ஏற்கனவே வில்லுவின் விவகாரத்தில் கடுப்பிலிருந்த விஜய் சம்மந்தமே இல்லாமல் அங்கிருந்த ரசிகர்களை நோக்கி "டேய்...,பேசிக்கிட்டு இருக்கோம்ல...,,சைலண்ஸ்" என தன் கோபத்தை கொட்டிவிட்டார். அவர் கத்துவதை அருகில் இருக்கும் பிரபுதேவா உள்ளுக்குள் பயத்தோடு, "ஆஹா இவன் இருக்கும் கடுப்புல கொஞ்சம் வுட்டா நம்மள கடிச்சே கொன்னுடுவான்" என நினைத்தவாறே திரும்பிப் பார்க்கிறார். நம்ம கேள்வி என்னன்னா ஒன்னு உன் கோபத்த பிரபுதேவா மேல காட்டியிருக்கனும், இல்ல அந்த நிறுபர் மேல காட்டியிருக்கனும் அத விட்டுட்டு ரசிகர்கள் மேல உன‌க்கு ஏன் இந்த வெறி? அதற்குப் பிறகு அவர்களிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் சென்றது என்ன ஆணவம்.முட்டாள் ரசிகர்கள் அவன் டேய்னு சொன்ன அடுத்த நிமிடம் 10 சேரை பறக்க விட்டிருந்தா, இன்னேரம் மன்றத்திலிருந்து 10 பேர் விலகியிருந்தா விஜய்க்கு இது ஒரு பாடமாக இருந்திருக்கும். "என்னை வாழ வைக்கும் ரசிக தெய்வங்க‌ளேன்னு" இனி எவன் சொன்னாலும் நம்ப‌க்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர்களெல்லாம் சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலுமே நடிப்பவர்கள் தான்.இப்ப மீண்டும் மேலே உள்ள‌  நீல வரிகளைப் படிங்க.

ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா.

விஜய் குடுத்த சவுண்ட பார்க்க‌ கீழே அமுக்குங்க.அட மவுஸத் தாங்க.

10 கருத்துகள்:

வேத்தியன் சொன்னது…

நீங்களுமா ???

வந்து பார்க்கவும்...

பெயரில்லா சொன்னது…

இந்த நாதாரி என்ன நாயைவிட கேவலமா கத்துது?

நா கூட ஏதோ சூட்டிங் ரிகர்ஸலோன்னு நெனச்சிப்புட்டேன்.

ஆமா அய் நா சபைல ஜிம்பாப்வேயில் நடக்கற மனித உரிமை மீரலை பற்றி பேசறார்ல்..

சைலன்ஸ்

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

ஹலோ மிஸ்டர் பணங்காட்டான்.. இது என்னோட டயலாக்குப்பா.. அவ்வ்வ்வ்வ்வ்...நான் பதிவுல போட்டதை இப்படி சுட்டு இருக்கீங்களே..

ttpian சொன்னது…

அப்படி போடு

டாஸ்மாக் கபாலி சொன்னது…

யாரு காமெண்டா இருந்தாலும் மிக அருமை.மிஸ்டர் கார்த்திகைப்பாண்டியன் நீங்க டீல் பன்ற விதமே காமெடியா இருக்கு, ந‌ன்றி

சரண் சொன்னது…

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…
//ஹலோ மிஸ்டர் பணங்காட்டான்.. இது என்னோட டயலாக்குப்பா.. அவ்வ்வ்வ்வ்வ்...நான் பதிவுல போட்டதை இப்படி சுட்டு இருக்கீங்களே..//

எந்தப் பதிவுங்க?? இந்த டயலாக்கப் படிச்சு சிரிச்சு வயிறே புண்ணாப்போச்சுங்க..

பெயரில்லா சொன்னது…

// "என்னை வாழ வைக்கும் ரசிக தெய்வங்க‌ளேன்னு" இனி எவன் சொன்னாலும் நம்ப‌க்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.//
அது தாங்க.

பெயரில்லா சொன்னது…

மதிப்பிற்குரிய அய்யா..
என் கம்யூட்டரில் வீடீயோ வராமல் அந்த இடத்தில் ப்ளாங்காக இருக்கிறது.. அங்கே ஒரு hyperlink கை வருகிறது.. அதை கிளிக் செய்தால் ஏதோ ஆங்கிலத்தில் activex x control என்று வருகிறது.. என்னால் விஜய் படத்தை மட்டுமல்ல எந்த வீடீயோவையும் பார்க்க இயலவில்லை நான் வின்டோஸ் எக்ஸ்பி உபயோகிக்கிறேன்... எனக்கு ஒரு உதவி தேவை.. ப்ளீஸ்

கார்க்கிபவா சொன்னது…

//இதனால் தான் என்னவோ பணமுதலைகளும், கையில்லாத டீசர்ட்,கழுத்தில்லாத டீசர்ட், சில நேரங்களில் துணியே இல்லாத‌ டீசர்ட் அணிந்த‌ நவரச மங்கைகளும், IT பெருமக்களும் பெருமளவு கூடி க் கும்மியடிக்கும் சத்யம் திரையரங்கில் விஜய் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டார்களாம். இது நான் சொல்லவில்லை//

கடைசி முன்ன்று வருடத்தில் குருவியும், ஏடிஎம்மும் சத்யம் வளாகத்தில் திரியிடப்பட்டன. தோல்விப்படங்களான குருவியும், ஏடிமெம்மும் கூட சத்யம் வளாகத்தில் 70 நாள் ஓடியது. சத்யம் சி.இ.ஓ அவர்கள் இதழில் விஜய் மினிமம் கேரண்ட்டி ஹீரோ என்று எழுதியிருந்ததை அந்த அந்தரங்கம் சொல்லவில்லையா?

பெயரில்லா சொன்னது…

enda ungaluku ella vera pudungara vella illaiya da...........poi velaiya paruda................