ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

சிங்கிள் டீ'யிக்காக‌ வேலை பார்த்தவர்கள்

மறுபடியும் "ஒரு கலைஞரின் "கடி"தம்": 

இந்திய திருநாட்டின் 15வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கான பணி முடிந்து விட்டது. (இனி நீங்க வேட்டய அதாவது ஓட்டு வேட்டயத் தொடங்கலாம்)

வேட்பாளர்கள் எல்லாம் வாக்கு சேகரிக்கும் பணியிலே முனைப்பாக ஈடுபட்டுள்ள செய்தியினை அன்றாடம் செய்திதாள்கள் வாயிலாக படித்தும், தொலைபேசி வாயிலாக ஒரு சிலர் கூறுவதிலிருந்தும் தெரிந்து கொண்டிருக்கிறேன். (சிலர் என்பது யார் தலைவரே அவுங்க..அவுங்க தானே

சில தொகுதிகளில் தேர்தல் பணி வேகமாக நடைபெற்ற போதிலும், ஒரு சில இடங்களில் நான் எதிர்பார்க்கின்ற அளவிற்கு வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறவில்லை என்பதை குற்றச்சாட்டாக அல்ல - இன்னும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செய்திட வேண்டுமென்ற எண்ணத்தோடும், ஆர்வத்துடனும் எழுதிட விரும்புகிறேன்.(எப்புடி நடக்கும் தலைவரே! நேத்து வந்த ரித்தீஸூக்கெல்லாம் மீட்டர வாங்கிகிட்டு சீட்ட குடுத்து வச்சிருக்கியலே) 

1967ம் ஆண்டுவாக்கில் பெரியவர் பக்தவத்சலம் கழக தோழர்களின் தேர்தல் பணிகளைப் பார்த்து விட்டு, சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு மணி கணக்கில் பணியாற்ற கூடியவர்கள் திமுக தோழர்கள்' என்று நாடாட்டியதை மறந்திருக்க மாட்டாய். அத்தகைய நாடாட்டுக்கு சொந்தக்காரர்களாகிய உங்களிடம் நான் மேலும் மேலும் அத்தகைய பணிகளை எதிர்பார்க்கின்றேன்.(அந்தக் கால உடன்பிறப்புகள் சிங்கிள் டீ'க்கு வேலைசெய்வார்கள். ஆனால் இன்றைய உடன்பிறப்புகளுக்கு "கட்டிங்" உட்டாத்தான் வேலை நடக்கும் தலைவரே) 

நடைபெறும் தேர்தல் தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அல்ல. மத்திய அரசிலே யார் அமரப்போகிறார்கள் என்பதைப் பற்றி முடிவு எடுக்கக்கூடிய தேர்தல். நாம் தொடர்ந்து கடந்த ஐந்தாண்டு காலமாக நாம் யாரோடு கூட்டணி அமைத்து 2004ம் ஆண்டிலே வெற்றி பெற்றோமோ அவர்களுடன்தான் இப்போதும் இருக்கிறோம் என்ற பெருமையோடு இருக்கின்றோம். (உண்மை தான் தலைவரே! 2004 ல் வென்றவர்களோடு தான் இந்த முறையும் இருப்பீர்கள், எதிர்க்கட்சி வரிசையில்) 

ஐந்தாண்டு கால மத்திய ஆட்சிக்கு நாம் எந்த நேரத்திலும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. நல்லவை நடைபெற உரிமைக்குரல் எழுப்பாமல் இருந்ததும் இல்லை.(5 ஆண்டுகால ஆட்சியில் இடைஞ்சல் குடுக்கவில்லை என்பதும் முற்றிலும் உண்மை தான். ஆனா 5 வருஷத்துக்கும் வேண்டிய இடைஞ்சலித் தான் முன்கூட்டியே குடுத்து அவங்கள படாத பாடு படுத்திட்டீயலே! கப்பல் வேனும், IT வேனும், நெலக்கரி வேனும்னு) 

தோழமை என்றால் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக நாம் அங்கே பணியாற்றியிருக்கிறோம். மத்திய அரசின் முக்கிய பங்குதாரர்களான காங்கிரஸ் கட்சியும் நாம் கேட்டுக்கொண்ட கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றியிருப்பதை நீயும் அறிவாய், நம் தமிழ்நாடும் அறியும்.(ஆமாம் ஆமாம். அவர்கள் வேறு வழியில்லாமல் "IT"யையும் சாலைப்போக்குவரத்தையும் கேட்டு வாங்கியதையை நாங்கள் அறிவோம் தலைவரே) 

குறிப்பாக நம்முடைய மொழியை செம்மொழியாக்கிய ஒரே காரியத்திற்காகவே நாம் மீண்டும் மீண்டும் அந்த கட்சியை ஆதரிக்கலாம். அது போலவே சேது சமுத்திர திட்டம் எத்தனை ஆண்டுகளாக நாம் கேட்ட கோரிக்கை? 2,427 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த திட்டத்தை நமக்கு அளிக்க முன் வந்த அரசல்லவா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. (உண்மைதான். இலங்கைத் தமிழரின் மீது ஓடும் இரத்தம் செம்மை தான். அவர்கள் அழும் போது அவர்கள் வாயிலிருந்து குருதியோடு கலந்த தமிழ் சிவப்பாக தான் வெளியாகிறது....அதைத்தான் அவர்கள் யுங்கொடுத்து, பயிற்சி கொடுத்து தமிழைச் செம்மொழியாக்கினார்கள் என்று கூறுகிறார் தலைவர்) 

பதவியேற்றவுடன் - நாம் கோரிக்கை வைத்தவுடன் நெசவாளர்களுக்கான சென்வாட் வரியை ரத்து செய்த அரசு அல்லவா? விவசாயிகளின் கடன்களை ரத்து செய்த அரசு அல்லவா? செம்மொழி மைய அலுவலகத்தை மைசூரிலிருந்து மாற்றிக்கொடுத்து சென்னையிலே அமைத்திட்ட அரசல்லவா?(விவசாயக் கடன் ரத்து ஏழைகளுக்கு கிடையாது. விவசாய லோன் வாங்கி இரால் பண்ணை, மீன் பண்ணை அமைத்தவர்கள், டிராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டவர்கள் ஆகிய மிக ஏழைகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததால் அவர்கள் நன்றியுடன் தான் இருப்பார்கள்)

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை சென்னைக்கு அருகிலே அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முன் வந்த அரசல்லவா? தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் மத்திய மந்திரிகளாக இடம் பெற உதவிய அரசு அல்லவா தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இப்படி எழுதிக்கொண்டே போகலாம். ஏட்டில்தான் இடமில்லை! (ஒக்கனேக்கல் குடி நீர்த்திட்டத்தை முடக்கி வைத்துள்ளது அல்லவா?, மீன்கள் பதனிடம் கிடங்குத் திட்டத்தை முடக்கி வைத்துள்ளதல்லவா?, சிங்கள வீரர்களுக்கு பயிற்சியளிக்கிறதல்லவா....இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.,என்ன கழுதையின் கஷ்டமர்கள் நாளைக்கு வரமாட்டார்கள்

இந்த கடிதத்தை நீ படித்துக்கொண்டிருப்பது ஏப்ரல் 26, 2009. இன்னும் 17 நாட்கள்தான் எஞ்சி இருக்கின்றன. எதற்கு? நீ வாக்கு சாவடிக்குள் சென்று உன் வாக்குகளை பதிவு செய்யவும், உன் முயற்சியால் எத்தனை வாக்காளர்களை நம் அணிக்கு ஆதரவாக நீ திரட்டி வைத்திருக்கிறாயோ, அவர்கள் எல்லாம் அவர்களின் வாய்மை நிறை வாக்குகளை நம் அணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பதிவு செய்திடவும்! (அதாவது கள்ள வோட்டுப் போடுறதுக்கு நீ எத்தனை பேரைத் திரட்டி வச்சிருக்கிறாயோ அவ்வளவு பேரையும் கரீக்கிட்டா கொண்டுவந்து சேர்த்திடனும் என்பது தான் தலைவரின் கோரிக்கை. அது மட்டுமில்லாம வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றவும், குறைந்த நேரத்தில் அதிக ஓட்டுக்களைக் குத்தவும் நல்லா பயிற்சி எடுத்துக்கோங்க என மறைமுகமாக சொல்லுகிறார் தலைவர்) 

தி.மு.. என்றால் சொந்த கட்சி வேட்பாளர்களை விட அதிகமாக தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றும் என்ற பெருமை நமக்குண்டு. எனவே தோழமை கட்சிகளைச் சார்ந்தவர்கள் வந்து நம்மை அழைக்க வேண்டும் நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருக்காமல் நிற்பது எந்த கட்சி என பார்க்காமல் உழைக்க வேண்டும்.(நல்ல கேட்டுக்குங்க உடன்பிறப்புகளா! தலைவர் சொல்லுறது தோழமைக் கட்சி தான். நீங்க பாட்டுல தோழர்கள் கட்சின்னு தப்பா புரிஞ்சிகிட்டுப் போயி கம்னியூஸ்டுகளுக்கு வேலை பாத்திரப்போறிய) 

ஜனநாயக முற்போக்கு அணியின் சார்பில் போட்டியிடுவது யார் எவர் என்பது முக்கியமல்ல. இந்த அணியின் வெற்றிதான் குறிக்கோள் என்ற உணர்வோடு நீ பாடுபடுவாய் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அண்ணன் எழுதினானா என்று நீ கேட்கக்கூடாதல்லவா? என் பணியிலே நான் தவறி விடக்கூடாது அல்லவா? அதற்காகவே நினைவூட்டுகின்றேன்.(அண்ணன் என்று சொல்லிவிட்டார் என்பதற்காக நாளைக்கே கோபாலபுரத்துக்குப் போயி நின்னு ஆயிரங்கோடி சொத்துல பங்கு கேட்டு நிக்கக்கூடாது! என்ன) 

அடுத்து. உன்னுடைய தொகுதியிலே திமுக போட்டியிட வேண்டுமென்று விரும்பி, தொகுதிப் பகிர்வில் தொகுதி தோழமை கட்சியோடு பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் நீயே போட்டியிட கருதியிருந்து அந்த வாய்ப்பு பறிபோய் வேறொருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் நினைப்பதற்கான நேரம் முடிந்து விட்டது. (உங்களுக்கெல்லாம் தலைவர் இதயத்தில் இடம் அளித்திருக்கிறார். நான் தெரியாமத்தான் கேக்குறேன். தலைவர் இதயத்துல என்ன மேன்சனா கட்டி உட்டு இருக்காரு. எல்லாருக்கும் அட்வான்ஸ் கூட வாங்காம இதயத்துல இடம் கொடுத்துடுறாரே?) 

களத்திற்குள்ளே இறங்கி விட்டோம். இனி வெற்றி ஒன்றுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று அண்ணன் நான் என் அருமை தம்பியை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். (அதாவது வெற்றி வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் அதாங்க "என்ன வேண்டுமானாலும்" செய்யலாம் என்பது தான் இதன் அர்த்தம். புரிஞ்சிதா உடன்பிறப்புகளே)

இன்னும் அரைக்கிலோ மீட்டர் தூரத்துக்கு அறிக்கை நீள்கிறது. இதுக்கு மேல என்னாலயே தாங்கமுடியல. அதுனால இவ்ளோ போதும்..

UPDATE TODAY : அதிசய உலகம் "அழகு மயில் ஆட

கருத்துகள் இல்லை: