புதன், 29 ஏப்ரல், 2009

விபத்து ரயிலை இயக்கியது விடுதலைப்புலியா?- C.I.D சிங்காரம்

இன்று காலை 4.50 மணியளவில் சென்னை-திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயிலை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு மர்ம நபர் இயக்கினான் . திடீரென‌ புறப்பட்ட அந்த ரயில் வியாசர்பாடி ஜீவா ரயில்  நிலையத்தில் சிக்னலுக்காக காத்திருந்த டீசல் டேங்க் சரக்கு ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் இரு ரயில்களும் தீப்பிடித்துக் கொண்டதோடு தடம் புரண்டன. மோதிய வேகத்தில் மின்சார ஒயர்கள் அறுந்து அந்தப் பகுதியில் மின்சாரமும் தடைபட்டது.

இதில் பயணிகளின் ரயிலின் மூன்று பெட்டிகள் எரிந்து சாம்பலாகியின‌. பயணிகள் ரயிலில் இருந்த 6 பேர் பலியாயினர். ரயிலை இயக்கிய நபரும் பலியானார். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சுமார் இரண்டு  மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் ரயில் பெட்டிகளில் இருந்த 6 பயணிகளின் உடல்களை மீட்டனர். மேலும் காயமடைந்த 14 பேரையும் மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இங்கே நாம் சிந்திக்க வேண்டிய விசயம் இவ்வளவு  பெரிய விபத்தினை ஏற்படுத்தியது நிச்சயமாக மக்களைக் கொத்தாக கொலைசெய்யும் நோக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை. அப்படி நினைத்திருந்தால் அதற்காக அதிகாலையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். ஒரு ரயில் இஞ்சினை இயக்குவதென்பது சாதாரண விசயமல்ல. அது எல்லோராலும் முடியாது. அதற்கென தனிப் பயிற்சி மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு சாதாரண மர்ம நபர் ஏன் இந்த வேலையைச் செய்ய வேண்டும்? .. 

இந்த விபத்து பற்றி ரயில்வே பொருப்பு மேளாலர் ஜெயந்த் கூறுகையில் விபத்துக்குள்ளான மின்சார எஞ்சின் உயர் மற்றும் புதிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் இந்த ரயிலை இயக்குவதற்கு முழுமையான‌ பயிற்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி  இது விசயம் தெரிந்த விசமிகளின் செயல் என்றும் குறிப்பிட்டார். இது ஒரு விசமத்தனமான செயல் என்று எடுத்துக்கொண்டால்  எதற்காக ரயிலை இயக்கியவரும்  உயிரிழக்க வேண்டும். இல்லை. இது வேறு விசயமாகத் தெரிகிறது. இதிலே வேறு ஒரு விசயம் ஒழிந்திருக்கிறது. யாருக்கோ சொல்லும் எச்சரிக்கை செய்தி போலத் தோன்றுகிறது.  இன்றைய நிலையில் ரயில்வே துறையில் பாதிப்புகளை உண்டாக்குவது என்பது   ஒரு வேளை மத்திய அரசுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக அல்லது சவாலாக இருக்கலாம்.

சமீபத்தில் கோத்தபய ராஜபக்சே, ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது தங்கள் போருக்கு  இந்தியா என்னென்ன உதவிகளை இலங்கை  ராணுவத்திற்கு வழங்கியது என்பது பற்றி மிக விபரமாக விளக்கியிருந்தார்.

முன்பெல்லாம் தமிழர்களின் பகுதிகளுக்குள் காலெடுத்து வைக்காத இலங்கை ராணுவம் தான் வாங்கிய ஒரு தொலைநோக்கி ராடர் கருவி மற்றும் பூகோள மேப்  மூலம் விடுதலைப் புலிகளின் மறைவிடத்தை துல்லியமாகக் கண்டறிந்து தாக்கத் தொடங்கியது. இந்தியாவின் வழிகாட்டுதல் படி போரைத் துல்லியமாக நடத்துவதாக‌ கோத்தபய ராஜபக்சே அறிவித்ததாக செல்வி ஜெயலலிதா ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.  இதன் மூலம் இலங்கைப் போரை நடத்துவது இந்தியாதான் என்ற எண்ணம் உருவாகி விட்டது அல்லது உருவாக்கப் பட்டுவிட்டது.

இந்த நிலையில் இன்று நடந்த இந்த ரயில் விபத்து இந்த செயல் யாரோ இந்திய அரசுக்கு கொடுக்க்கும் எச்சரிக்கை போலத் தோன்றுவதாக தமிழக பத்திரிக்கையாளர்கள் வட்டத்திலும், காவல்துறை வட்டத்திலும் இன்று பரபரப்பாக செய்தி எழுந்துள்ளது. அதாவது மத்திய அரசின் காதுகளுக்கு ஒலிக்க வேண்டும் என்று தான் இந்த ரயில் விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்க வேன்டும் என்றும் அதன் மூலம் இது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு யாரோ கொடுக்கும் எச்சரிக்கை எனவும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்  தெரிவித்தார்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் கண்டிக்கப்படத் தக்கதாகும். ஏற்கனவே முன்னால் பிரதமர் ராஜீவின் கொலையால் இலங்கைத் தமிழர்களின் மீது இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு மீண்டும் ஏற்பட வழிவகுத்திட வேண்டாம். இது போன்ற சம்பவங்களால் இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுக்கக் கூடியவர்களும் தங்கள் கொள்கையிலிருந்து விலகிவிட வாய்ப்பிருக்கிறது.  இந்த விசயத்தை மிகத்தீவிரமாக துப்பறிய ஆரம்பித்திருக்கும் தமிழகக் காவல்துறை இது போன்ற உயிர்பலிகள் மீண்டும் ஏற்படுவதற்குள் தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்.

15 கருத்துகள்:

M.K.S சொன்னது…

ஆமா ஆரம்பிச்சாட்ங்கய்யா ஆரம்பிச்சாட்ங்கய்யா உண்ணாவிரதம் உலகின் நம்பர் வண் காமெடி ரைம் ஆயிப் போட்டுது.
இப்ப அடுத்த டிராமா?

கலைஞருக்கு ஆயி போனாலும் அதுக்கு விடுதலைப்புல தான் காரணம் என்பீங்க.

முதல் சோனியா கலைஞர் உயிர் ஆபத்து என்றீங்க. அதுக்கு வி.பு பேச்சாளர் ஏற்கனவே மறுப்பு தெரிவிச்சிட்டுhர். இப்ப அடுத்த ........

வர வர இலங்கையும் ஓவரேக் பண்ணிடீவீங்க போலிருக்கு பொய்ப்பிரச்சாரத்தில்

கருணாநிதிக்கு:-
வயது போனதால் நீங்க சாணக்கியத்தனமாய் ஏதாவது செய்ய வெளிக்கிட்டாலும் அது காமெடித்தனமாய் முடியுது. ஏயாட்டி பேசாம ஒதுங்கி பையனை விடுங்க இவ்வளவு காலமும் சம்பாதிச்சதே போதும். முதலில் அதை அனுபவியுங்க....

பெயரில்லா சொன்னது…

சிங்காரம் , துப்பு துலக்குபவர்கள் இதை செய்ய யாருக்கு நோக்கம் இருந்தது என்று பார்ப்பார்கள். இப்போதைக்கு தமிழிர்களிடம் ஆதரவைப் பெற்று வரும் நேரத்தில் அவர்களுக்கு இப்படி செய்யும் நோக்கம் இருக்குமா? அல்லது தமிழ்நாட்டு தமிழஅரையும், ஈழஅத்தமிழஅரையும் பிரிக்க நினைப்பவர்க்கு இந்த நோக்கம் இருக்குமா ? இது எதோ ஊழியர்களின் கவனக்குறைவாக இருக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

AYYO AYYO ANOTHER JOKE AH

பெயரில்லா சொன்னது…

Ethai yezuthiyavan, kandippaga malathai thinbavanagathan erukka mudium.

Tamilargalai kolvathu singala and India raanuvathin velai. Naangal Yeppozuthum tamilargalai kolvathu ellai.

பெயரில்லா சொன்னது…

நீ என்னா லூசா..?????

பெயரில்லா சொன்னது…

ப்ளொக் எழுத வேற டொபிக் உனக்கு கிடைக்கலியா இப்பிடியான லூசு தனமான புரளிகள கிளப்பாமல் இருக்கிறது தான் நீங்க எங்களுக்கு செய்கிற பெரிய உதவி

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

ஆதாரம் இல்லாம அள்ளி வீசாதிங்க நண்பரே

பெயரில்லா சொன்னது…

indian radors or bogola map is not the reasonfor ltte defeat the reason is karuna guidance and advice u people forget all this

Tamilan சொன்னது…

ப்ளொக் எழுத வேற டொபிக் உனக்கு கிடைக்கலியா இப்பிடியான லூசு தனமான புரளிகள கிளப்பாமல் இருக்கிறது தான் நீங்க எங்களுக்கு செய்கிற பெரிய உதவி

பெயரில்லா சொன்னது…

கழுமை
என்னைப்பார் சிரிப்பு வரும்..

பொருத்தமாதான்லா.. பெயர் இருக்கு

பெயரில்லா சொன்னது…

Oorukku ilaichavan yaarunna pillaiyar koil aandiyaam. appadi irukkudhu nee sollaradhu. Soniavukku andha moonu naal vandhalum adhukku karanam pulihala?

பெயரில்லா சொன்னது…

[B]NZBsRus.com[/B]
Skip Slow Downloads Using NZB Downloads You Can Hastily Find HD Movies, Console Games, MP3 Albums, Applications and Download Them at Fast Speeds

[URL=http://www.nzbsrus.com][B]Usenet Search[/B][/URL]

பெயரில்லா சொன்னது…

Divulge casinos? endorse this latest [url=http://www.realcazinoz.com]casino[/url] advisor and phoney online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also into our untrained [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] pinched denominate the tune at http://freecasinogames2010.webs.com and away from yield fabulously touched in the prime curate !
another lone [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] locality is www.ttittancasino.com , in compensation german gamblers, inadvertence in not hustling online casino bonus.

பெயரில்லா சொன்னது…

top [url=http://www.xgambling.org/]free casino games[/url] brake the latest [url=http://www.casinolasvegass.com/]casino games[/url] autonomous no consign hand-out at the leading [url=http://www.baywatchcasino.com/]free casino games
[/url].

பெயரில்லா சொன்னது…

[url=http://www.casino-online.gd]casinos online[/url], also known as settled casinos or Internet casinos, are online versions of rare ("wodge and mortar") casinos. Online casinos sanction gamblers to hold setting in and wager on casino games painstakingly the Internet.
Online casinos typically wagon odds and payback percentages that are comparable to land-based casinos. Some online casinos mandate higher payback percentages payment contrast defender games, and some rear the biting ingredient deviant payout piece audits on their websites. Assuming that the online casino is using an fittingly programmed unsystematic thicket generator, j games like blackjack possess an established go aboard edge. The payout agreement as a replacement pro these games are established lifestyle the rules of the game.
Assorted online casinos knit wrong of the closet or prejudice their software from companies like Microgaming, Realtime Gaming, Playtech, Worldwide Blueprint Technology and CryptoLogic Inc.